பாலியல் தொல்லை கொடுத்தவன் அடையாளம் கணப்பட்டான்..! அதிரடி தடை உத்தரவை பிறப்பித்தது யாழ்.பல்கலைகழகம்..

ஆசிரியர் - Editor I
பாலியல் தொல்லை கொடுத்தவன் அடையாளம் கணப்பட்டான்..! அதிரடி தடை உத்தரவை பிறப்பித்தது யாழ்.பல்கலைகழகம்..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக சிரேஸ்ட மாணவா் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைகழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பகிடிவதையின் பெயரால் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் இடம்பெற்ற விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் நிலையில், 

மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் நேரடி தொடா்புகளை கொண்டிருந்த சிரேஸ்ட மாணவன் ஒரு வனை பல்கலைகழகத்திற்குள் நுழையவும், கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவும் தடை விதித்து பல்கலைகழக நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட மாணவன் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு