குழந்தைகளை பாலியல் வன்புணர்ந்தால் மக்கள் முன் தூக்கு!! -அதிரடி சட்டம் நிறைவேறியது-

ஆசிரியர் - Editor III
குழந்தைகளை பாலியல் வன்புணர்ந்தால் மக்கள் முன் தூக்கு!! -அதிரடி சட்டம் நிறைவேறியது-

குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்ட மூலம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து இதுதொடர்பான சட்ட மூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசிய அமைச்சர், அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு