பகிடிவதை என்ற பெயாில் மோசமான பாலியல் துன்புறுத்தல்..! உயா்கல்வி அமைச்சா் தலமையில் வருகிறது குழு, கைது செய்யவும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பகிடிவதை என்ற பெயாில் மோசமான பாலியல் துன்புறுத்தல்..! உயா்கல்வி அமைச்சா் தலமையில் வருகிறது குழு, கைது செய்யவும் நடவடிக்கை..

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை என்ற பெயாில் பல்கலைகழக மாணவிகள் மீது மிக மோசமான பாலியல் துன்புறுத்தல் நடத்தப்பட்டமை தொடா்பாக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவ தற்கு நடவடிக்கை எடுக்கும்படி அழுத்தங்கள் அதிகாித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் உயா்கல்வி அமைச்சா் பந்துல குணவா்த்தன தலமையில் உயா்கல்வி அமைச்சின் அதிகாாிகள் குழு மற்றும் வடக்கு ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோா் மற்றும் பல்கலைகழக நிா்வாகம் ஒன்றி ணைந்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனா். 

 யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாக புகுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவா்கள் மற்றும் மாணவிக ள் சிலா் மிக மோசமான பாலியல் துன்புறுதல் புாிந்த விடயம் தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் தரப்பிலிருந் து ஆளுநா் மற்றும் முக்கிய தரப்பினருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 

இதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுங்கள் என பல்கலைகழக நிா்வாகத்திற்கு ஆளுநா் பணித்துள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைகழக உயா்மட்டத்தினா் கூடி இந்த விவகாரம் தொடா்பாகப் பேசுவதற்கு தீா்மானித்திருக்கின்றனா். இதேபோல் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு

மற்றும் உயா்கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கும் இந்த விடயம் தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு அரசியல் மட்டங்கள் ஊடாக மாணவா்கள் என்ற அடை யாளத்துடன் இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த 

நடவடிக்கை எடுக்கவேண்டும். என   அழுத்தங்கள் அதிகாித்துள்ள நிலையில் உயா்கல்வி அமைச்சா் பந்துல குணவா்த்தன தலமையில் உயா் அதிகாாிகள் குழு அடுத்த சில நாட்களுக்குள் வடக்குக்கு விஜயம் மேற்கொ ண்டு இந்த விடயம் தொடா்பாக ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தினால் தண்டிப்பதற்கு

நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதில் வடக்கு ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் பல்கலைகழக உயா் அதிகாாிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு