சிறுவா்களுக்கு சிகரெட் விற்பனை ..! அதிகளவு சட்ட நடவடிக்கை எடுத்த மாவட்டங்கள் பட்டியலில் வவுனியா, யாழ்ப்பாணம் 2ம், 3ம் இடங்களில்..!

ஆசிரியர் - Editor I
சிறுவா்களுக்கு சிகரெட் விற்பனை ..! அதிகளவு சட்ட நடவடிக்கை எடுத்த மாவட்டங்கள் பட்டியலில் வவுனியா, யாழ்ப்பாணம் 2ம், 3ம் இடங்களில்..!

இலங்கையில் 21 வயதிற்கும் குறைந்தவர்களிற்கு புகைத்தல் விற்பனை செய்தமைக்காக அதிகளவு வா்த்தகா்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்த மாவட்டங்கள் பட்டியலில் வவுனியா மாவட்டத்திற்கு 1ம் இடமும், யாழ்.மாவட்டத்திற்கு 3ம் இடமும் கிடைத்துள்ளது. 

மதுவரித் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டின் தகவல்கள் பிரகாரம் 25 மாவட்டங்களிலும் குறித்த நடவடிக்கைக்காக 1036 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உச்சபட்சமாக 246 வழக்குகள் அம்பாறை மாவட்டத்திலும் இரண்டாவது இடத்தில் 

வவுனியா மாவட்டத்தில் 154 வழக்குகளும் மூன்றாம் இடத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 147 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பதுளையில் 89 வழக்குகளும் , நுவரேலியாவில் 85 , புத்தளம் 79 , கண்டி  51 வழக்குகளும் , 

மாத்தறையில் 48 வழக்குகளும் , திருகோணமலையில் 27 வரக்குகளும் , அம்பாந்தோட்டையில் 8 வழக்குகளும் , இரத்தினபுரியில் 3 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் கொழும்பு , களுத்துறை , கம்பகா , மாத்தளை , மொனராகலை , காலி , 

கேகாலை , அனுராதபுரம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு ஆகிய 10 மாவட்டங்களில் இருந்தும் எந்தவொரு வழக்கும் குறித்த நடவடிக்கையின் கீழ் தாக்கல் செய்யப்படவில்லை. எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு