யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு பகுதியில் அதிரடிப்படை முற்றுகை..! 52 வயது முதியவர் கைது. 32 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு பகுதியில் அதிரடிப்படை முற்றுகை..! 52 வயது முதியவர் கைது. 32 கிலோ கஞ்சா மீட்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது 52 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து 32 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து, இன்று பிற்பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதன்போதே  வீட்டில் இருந்து 32 கிலோகஞ்சா மீட்க்கப்பட்டதுடன் 52 வயடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் பளைப்பொலிசார் மேலதிக விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்தசந்தேக நபரையும் சான்றுப்பொருளையும் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு