வடமாகாண இரட்டை மாட்டுவண்டி சவாரியில் யாழ்.மாவட்ட காளைகள் 4 பிரிவுகளில் வெற்றி..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண இரட்டை மாட்டுவண்டி சவாரியில் யாழ்.மாவட்ட காளைகள் 4 பிரிவுகளில் வெற்றி..!

மன்னார்- மாந்தை பகுதியில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரியில் நான்கு போட்டிகளில் யாழ்.மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட காளை மாடுகள் வெற்றியடைந்துள்ளன.

கள்ளியடியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சண்முகம் அமுர்தலிங்கத்தின் 2ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கின் பாரம்பரிய நிகழ்வான இரட்டை மாட்டு வண்டிச் சவாரி போட்டி இன்று மாலை நடைபெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் 51 ஜோடி காளைகள் பங்குபற்றின. இந்தப் போட்டி A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்றது.

குறித்த 4 பிரிவுகளிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த போட்டியாளர்களின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு