யாழ்.நாவற்குழியில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து இராணுவம் அதிரடி நடவடிக்கை..! சாரதி நிறை மதுபோதையில், 46 பயணிகளை காப்பாற்றியது இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து இராணுவம் அதிரடி நடவடிக்கை..! சாரதி நிறை மதுபோதையில், 46 பயணிகளை காப்பாற்றியது இராணுவம்..

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி ப யணித்த இ.போ.ச பேருந்தின் சாரதி நிறை மதுபோ தையில் இருந்த நிலையில் இராணுவ சோதனையி ன்போது பேருந்து சாரதியை கைது செய்து

46 பயணிகளின் உயிரை இராணுவம் காப்பாற்றியு ள்ளது. 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து பேருந்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 7.45 மணிக்கு அக்கரைப்பற்றுக்கு புறப்படும் பேருந்து நாவற்குழி சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டு சோதனையிட முற்பட்ட போது, சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது. 

சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பேருந்தை சோதனையிட்ட போது, 2 பியர் ரின்களும் சாராயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டன.

சாரதி கடுமையாக எச்சரிக்கைப்பட்டதுடன், அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு