சம்மாந்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு..! துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வெடிபொருட்கள் மீட்பு.. பயங்கரவாதியா..?

ஆசிரியர் - Editor I
சம்மாந்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு..! துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வெடிபொருட்கள் மீட்பு.. பயங்கரவாதியா..?

சம்மாந்துறை பகுதியில் பொலிஸாா் நடாத்திய அதிரடி சுற்றிவளைப்பு தேடுதலில் துப்பாக்கி மற்றும் ரவைகள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வீடொன்றில் இருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி, 64 துப்பாக்கி ரவைகள், வெடிமருந்துகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 

இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன. சம்மாந்துறை பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக 

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு