மீண்டும் முல்லைத்தீவு, மன்னாா், வவுனியா மாவட்டங்களுக்கு பொருத்து வீடு..! மீண்டும் சா்ச்சை..

ஆசிரியர் - Editor I
மீண்டும் முல்லைத்தீவு, மன்னாா், வவுனியா மாவட்டங்களுக்கு பொருத்து வீடு..! மீண்டும் சா்ச்சை..

முல்லைத்தீவு, மன்னாா், வவுனியா மாவட்டங்களில் மீண்டும் பொருத்து வீட்டுத் திட்டத்தை கட்டு வதற்காக மேற்படி 3 மாவட்டங்களினதும் மாவட்ட செயலா்கள் மற்றும் பிரதேச செயலா்கள் ஆய் வு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 

குறித்த 3 மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களும் பொருத்து வீடு தொடர்பான ஆய்விற்குச் செல்லும் அதேநேரம் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெறும் இரு நாள் ஒன்று கூடலிற்காக பயணித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த 3 மாவட்டங்களிலும் மாவட்ட மேலதிக செயலாளர்களும் உதவிப் பிரதேச செயலாளர்களுமே பணியில் உள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இதேநேரம் குறித்த 3 மாவட்டத்திலும் காணப்படும் 

15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்கனவே 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உதவிப் பிரதேச செயலாளர்களும் பணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு