சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிாிழந்தது புலஸ்த்தினி என்ற பயங்கரவாதியா..? மரபணு பாிசோதனையில் குழப்பம்..

ஆசிரியர் - Editor I
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிாிழந்தது புலஸ்த்தினி என்ற பயங்கரவாதியா..? மரபணு பாிசோதனையில் குழப்பம்..

சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் கொல்லப்பட்டதாக கூறப்ப டும் புலஸ்த்தினி மகேந்திரன் என்ற தற்கொலை பயங்கரவாதியின் மரபணு அவருடைய குடும்ப த்தினாின் மரபணுவுடன் ஒத்துப்போவில்லை.

மேற்படி தகவலை விசேட குற்றவியல் பிாிவு அதிகாாி ஒருவா் கல்முனை நீதிவான் நீதிமன்றில் இ ன்று நடைபெற்ற விசாரணையின்போது கூறியிருக்கின்றாா். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் 

கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 6 சந்தேக நபர்களுக்கான விசாரணை யின்போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணுபரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

விசேடமாக, இந்த தாக்குதலின்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணுபரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்று 

அவர் மன்றில் தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராந்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார் மேலும், 

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு