திருடியதாக கூறி பொதுமக்கள் பிடித்து சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த மகனை காணவில்லை..! தாய் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
திருடியதாக கூறி பொதுமக்கள் பிடித்து சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த மகனை காணவில்லை..! தாய் முறைப்பாடு..

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக் கப்பட்ட பின்னா் சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மகனை காணவில்லை என தாய் ஒருவா் யாழ்.மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளாா். 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபடடார் என குற்றம் சாட்டி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் பொதுமக்களினால் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இளைஞன் அரியாலை பூம்புகாரை சேர்ந்த தனது மகன் என தெரிவித்துள்ள தாயார் ஒருவர் பொலிஸாரிடம் தனது மகன் எங்கே? என கேட்டுள்ளார்.எனினும் பொலிஸார் தாம் அவரை கைது செய்யவில்லை என மறுத்துள்ளதாக குறித்த தயாா் கூறினாா். 

எனினும் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை பொலிஸார் அழைத்து சென்றதாக சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று சில நாட்கள் ஆகின்ற போதிலும் தனது மகனை பொலிஸார் இன்று வரை வெளிப்படுத்தவில்லை. 

என குற்றம் சட்டியுள்ளதுடன் காணாமல் போயுள்ள தனது மகனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு