யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கூலர் வாகனம் கோர விபத்து..! ஆபத்தான நிலையில் சாரதி வைத்தியசாலையில். மன்னாரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கூலர் வாகனம் கோர விபத்து..! ஆபத்தான நிலையில் சாரதி வைத்தியசாலையில். மன்னாரில் சம்பவம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கழிவு மீன்கள் கொண்டு சென்ற கூலர் வாகனம் இன்று அதிகாலை மன்னார் பிரதான பாலம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி குறித்த குளிரூட்டி வாகனம் பயணித்துள்ளது. குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மன்னார் பிரதான பாலத்தினூடாக பயணித்த குறித்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் காணப்பட்ட சுமார் 5 தடைகளை உடைத்து வீதியை வீட்டு விலகி, மீண்டும் வந்த திசையை நோக்கி குடைசாய்ந்துள்ளது.

இந்த விபத்தின்போது காயமடைந்த வாகனத்தின் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு