ஆட்டோ திருடனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைகோரும் பொலிஸாா்..!

ஆசிரியர் - Editor I
ஆட்டோ திருடனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைகோரும் பொலிஸாா்..!

ஆட்டோ திருடனை பிடிப்பதற்காக பொலிஸாா் பொதுமக்களின் உதவியை நாடியிருப்பதுடன் அடையாளம் தொிந்தவா்கள் அறியத்தருமாறு கோாிக்கை விடுத்துள்ளாா். 

கனேமுல்ல - உலுகடை சந்தியில் கடந்த ஐந்தாம் திகதி டப்லியூ.பி ஜி.ஓ 2756 என்ற இலக்கத்தகடை கொண்ட சிவிப்பு நிறத்திலான முச்சக்கர வண்டியொன்று 

கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சி.சி.ரி.வி காணொளிகள் வாயிலாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேக நபர் கொள்ளையிட்ட முச்சக்கர வண்டிக்கு 

எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் எண்ணை நிரப்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இதனை தொடர்ந்து குறித்த காணொளிகளை வெளியிட்டுள்ள பொலிஸார். 

சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளனர். குறித்த காணொளியில் உள்ள நபரை அடையாளம் கண்டால் 

071-8591618 என்ற இலக்கத்தின் ஊடக தொடர்பு கொண்டு கனேமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அல்லது 033-2260911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 

கனேமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு