லட்சக்கணக்கில் தமிழா்களை கொன்று குவித்த கோட்டா அரசுக்கும், இராணுவத்திற்கும் 355 கோடி உதவியா..? வைகோ ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
லட்சக்கணக்கில் தமிழா்களை கொன்று குவித்த கோட்டா அரசுக்கும், இராணுவத்திற்கும் 355 கோடி உதவியா..? வைகோ ஆவேசம்..

லட்சக்கணக்கான ஈழ தமிழா்களை கொன்று குவித்து, தமிழக மீனவா்கள் மீது இப்போதும் துப்பா க்கி சூடு நாடாத்தியும், தாக்கியும் அழித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டபாயவின் நாட் டு இராணுவத்திற்கு 355 கோடி நன்கொடையா?

இந்த நடவடிக்கையை இந்திய அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். இந்திய அரசாங்கத்தி ன் இந்த நடவடிக்கையினை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்டவாறு மதிமு க பொதுச் செயலாளா் வைகோ கூறியுள்ளாா். 

இந்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க 355 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கு வது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியான பின்னரும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை 

கொன்று குவிக்க காரணமான கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு அழைத்து, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதத் தளவாடங்கள் வாங்க 355 கோடி ரூபாய் நிதிஉதவி அளிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அதனை உடனடியாக 

மத்திய அரசு நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு