கள்ள காதலால் நடந்த பயங்கரம்..! 43 வயதான நபா் பலி, கொலையாளி தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
கள்ள காதலால் நடந்த பயங்கரம்..! 43 வயதான நபா் பலி, கொலையாளி தப்பி ஓட்டம்..

நாணுஓயா பகுதியில் கூாிய ஆயுதத்தினால் குத்தி 43 வயதான குடும்பஸ்த்தா் ஒருவா் கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்குமிடையில் தகாத உறவுமுறை இருப்பதை அறிந்துகொண்ட கொலையாளி அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி 

கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி.சசேந்திர பெர்ணாண்டோ (வயது -43) என 

அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், 

நீதவானும் மரணம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு 

கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், கொலையாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸாரும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு