தொண்டராசிரியர்கள் போராட்டம்!! -வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகை-

ஆசிரியர் - Editor III
தொண்டராசிரியர்கள் போராட்டம்!! -வடக்கு ஆளுநர் அலுவலகம் முற்றுகை-

வடக்கு மாகாணத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு அரச நியமனம் வழங்கக்  கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

மாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமனத்தை வழங்க கோரி பல்வெறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றொம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம்.

ஆகவே தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கின்றவர் எங்களுக்கான நியமனங்களை உரிய முறையில் விரைவாக வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்என்றனர்

இதே வேளை போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் ஈடபட்ட போதும் அலுவலகத்தி ஆளுநர் உள்ளிட்இல்லாத காரணத்தினால் ஆளுநரின் ஊடக செயலாளர் எஸ்.முகுந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் போது எதிர்வரும் புதன் கிழமை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென வழங்கிய வாக்குறுதியையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு