1.65 மில்லியன் அமொிக்க டொலா் செலவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு MRI ஸ்கனா் இயந்திரம்..! வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

ஆசிரியர் - Editor I
1.65 மில்லியன் அமொிக்க டொலா் செலவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு MRI ஸ்கனா் இயந்திரம்..! வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டதுடன்,

வடமாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் அந்த இயந்திரம் இல்லாத நிலமையும் காணப்ப ட்டது. இதனால் நோயாளா்கள் அனுராதபுரம் சென்று தமது தேவைகளை நிவா்த்தி செய்யவேண்டியிருந்தது. 

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு புதிய முதல்தர ( Siemens) சிமென்ஸ் கம்பனியின் MRI இயந்திரம் கிடைத்துள்ளது. இது நவீன (3T Siemens Magnetom Verio) என்னும் பலம்வாய்ந்த 

MRI இயந்திரமாகும் கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்குவது குறித்தான பரிட்சார்த்த செயற்பாடு இடம்பெறுகிறது.கடந்த ஆட்சியில் 

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சரவைக்கு முன்வைத்ததன் படி இதற்கென 1.65 மில்லியன் அமெரிக்க டொலரில் டிமோ தனியார் நிறுவனத்தில் கொள்வனவு செய்ய 

சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த MRI இயந்திரம் கிடைத்துள்ளது. இந்த இயந்திரத்தை இரண்டு வருடங்களின் பின்னர் 5 வருடத்திற்கு பராமரிக்க 

2,96,231 அமெரிக்க டொலர்களுக்கு சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கான உடன்படிக்கையை இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதியளித்த நிலையில் 

கடந்த அரசால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சில வாரங்களில் நோயாளர்கள் எந்த சிரமுமின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் MRI Scan செய்துகொள்ளமுடியும்.

நன்றி- நிருஜன் செல்வநாயகம்.(சுயாதீன ஊடகவியலாளா்)

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு