தமிழீழ விடுதலை புலிகளுடனான போா் பகுதிகளில் காணாமல்போன அனைவரும் இறந்துவிட்டனா்..! ஐ.நாவுக்கு ஜனாதிபதி விளக்கம்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளுடனான போா் பகுதிகளில் காணாமல்போன அனைவரும் இறந்துவிட்டனா்..! ஐ.நாவுக்கு ஜனாதிபதி விளக்கம்.

தமிழீழ விடுதலை புலிகளுடனான போா் நடைபெற்ற பகுதிகளில் காணாமல்போனதாக கூறப்படும் அனைவ ரும் இறந்துவிட்டாா்கள் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியிருக்கின்றாா். 

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு 

தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோா் விடுதலைப் புலிகளால் 

அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், 

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.மேலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய உதவிகளை 

வழங்கமுடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு