காணாமல்போன 3 சிறுவர்கள் அதிகாலையில் மீட்பு..! என்ன நடந்தது? தீவிர விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போன 3 சிறுவர்கள் அதிகாலையில் மீட்பு..! என்ன நடந்தது? தீவிர விசாரணை ஆரம்பம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் காணாமல்போயிருந்த 3 சிறுவர்களும் இன்று அதி காலை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் தாம் கோவில் மடத்திற்குள் படுத்து உறங்கியதாக கூறியிருக்கின்றனர். குறித்த சிறுவர்கள் 3 பேரும் காணாமல்போன 

நிலையில் நேற்று இரவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந் தது. எனினும் சிறுவர்கள் மீட்கப்படாத நிலையில்

நள்ளிரவுக்கு பின் தேடுதல் நிறுத்தப்பட்டது. இதன் பின்னரும் இளைஞர்கள், பொதுமக்கள் கூடி தொடர் ந்தும் தேடிவந்த நிலையில் இன்று அதிகாலை

குறித்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் தாம் கோவில் மடத்திற்குள் படுத்து உற ங்கியதாக கூறியுள்ளனர். எனினும்

ஏன்? எப்படி? என்பது தெளிவாக இல்லாத நிலையி ல் குறித்த சிறுவர்களிடம் பொதுமக்களும், பொலி ஸாரிம் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு