ALL IS WELL எல்லாம் நன்மைக்கே..! ஏவுகணை தாக்குதல் குறித்து அமொிக்க அதிபா் ட்றம்ப் கருத்து..!

ஆசிரியர் - Editor I
ALL IS WELL எல்லாம் நன்மைக்கே..! ஏவுகணை தாக்குதல் குறித்து அமொிக்க அதிபா் ட்றம்ப் கருத்து..!

அமொிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தியிருக்கும் நிலையில் அமொிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் தனது ருவிட்டா் பக்கத்தில் கருத்து கூறியுள்ளாா். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “எல்லாம் நன்மைக்கே”  ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இரு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான மதிப்பீடு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்துள்ளது. 

உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவம் அமெரிக்காவிடம் உள்ளது. இதுதொடர்பாக நாளை காலை ஒரு அறிக்கையை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு