காதலியின் தந்தை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் செய்த கொடூர செயல்!

ஆசிரியர் - Admin
காதலியின் தந்தை திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் செய்த கொடூர செயல்!

கன்னியாகுமரி அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதியில் காதலியை கழுத்தறுத்துக் கொன்ற காதலன், தானும் கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

காரகோணம் பகுதியைச் சேர்ந்த ஆஷிகா என்ற 19 வயதான பெண் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனு என்ற இளைஞனும் ஆஷிகாவும் பள்ளிக் காலம் முதலே காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆஷிகாவை திருமணம் செய்துவைக்குமாறு அவரது தந்தை அஜித்குமாரிடம் அனு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான். அதற்கு அவர் சம்மதிக்காததால், உடைந்த சோடா பாட்டிலுடன் ஆஷிகாவின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஆஷிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு