காலையில் கோர விபத்து..! 16 வயது பாடசாலை மாணவன் பலி, மற்றொரு இளைஞன் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
காலையில் கோர விபத்து..! 16 வயது பாடசாலை மாணவன் பலி, மற்றொரு இளைஞன் ஆபத்தான நிலையில்..

தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ள து. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிளில் எதிரே பயணித்த இளைஞர்களுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் வயது 16 என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில். விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு