பெண் வைத்தியர் கொலை..! காமுகர்களை சுட்டு கொன்ற பொலிஸார்.. கைதட்டி வாழ்த்து கூறிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
பெண் வைத்தியர் கொலை..! காமுகர்களை சுட்டு கொன்ற பொலிஸார்.. கைதட்டி வாழ்த்து கூறிய மக்கள்..

இந்தியா- ஹைதராபாத் பகுதியில் மிருக வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய் து படுகொலை செய்த காமுகர்கள் 4 போரை சினிமா பாணியில் பொலிஸார் சுட்டு கொன் றுள்ள நிலையில் மக்கள் பொலிஸாரை பாராட்டியுள்ளனர்.

கடந்த நவ.27 ல், கால்நடை பெண் வைத்தியரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகளையும், பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைக்கு கூட்டி சென்று விசாரணை நடத்தியவேளை அவர்கள் தப்பி செல்ல முயன்ற போது 

என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்.தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் டாக்டரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர்.அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, 

அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார், 

கடந்த நவ.,29ல் கைது செய்து விசாரித்து வந்தனர்.குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்இந்நிலையில், குற்றவாளிகளை, சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். 

பெண் டாக்டரை எரித்து கொன்ற, தேசிய நெடுஞ்சாலை 44 ல் பாலத்தின் அடியில், குற்றவாளிகளை போலீசார் கொண்டு சென்றனர். அங்கு, குற்றம் எப்படி நடந்தது என நடித்து காட்டுமாறு போலீசார், அவர்களிடம் கூறியுள்ளனர். 

ஆனால், 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டு கொன்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு