தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு..! உறுதிப்படுத்தியது டெல்கி மேல் நீதிமன்றம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு..! உறுதிப்படுத்தியது டெல்கி மேல் நீதிமன்றம்..

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்த இந்திய உள்ளுதுறை அமைச்சின் தீா்மானத்தை டெல்கி மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து, தொடர்ந்து அதை நீடித்து வருகிறது.

அதன்படி, 5 ஆண்டுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட தடை, கடந்த மே மாதம் முடிவடைந்தது. தடை நீடிக்கப்படக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 

கடந்த மே மாதம் 14ஆம் திகதி இந்திய உள்துறை அமைச்சகம் தடையை 5 ஆண்டுகள் நீடித்தது.தடை நீடிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ‘தனி ஈழம் என்ற கோரிக்கையை 

விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் கைவிடவில்லை. மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க பல்வேறு நாடுகளில் நீதி வசூலிக்கப்படுகிறது. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று திரட்ட பல்வேறு முயற்சிகள் நடக்கிறது. 

இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுகிறது’ என விளக்கம் அளித்தது.5 ஆண்டு தடை நீடிக்கப்பட்டதுக்குத் தமிழர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து இந்திய அரசுக்குக் கோரிக்கைகளும் குவிந்தன.இதையடுத்து, புதுடில்லி மேல் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் தலைமையில் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்துக் கேட்கப்பட்டது.

இந்த தீர்ப்பாயத்தின் முன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் உள்பட, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எனப் பலர் முன்னிலையாகி தடை வேண்டாம் என்பதுக்கான விளக்கத்தை அளித்துவிட்டு வந்தனர். 

தீர்ப்பாயம் புதுடில்லி, சென்னையில் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில், தீர்ப்பாயம் மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்து, அதுகுறித்த தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு