இலங்கையின் புதிய ஆட்சியாளரிடம் இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன?

ஆசிரியர் - Admin
இலங்கையின் புதிய ஆட்சியாளரிடம் இந்தியாவின் எதிர்பார்ப்பு என்ன?

இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின் எக்கனமிக் டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களை பாதுகாக்க வேண்டும், இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது.

இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எந்த புதிய ஆட்சியாளரும் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு