கொழும்பு- யாழ்- சென்னை இடையே பறப்பை ஆரம்பித்தது பிட்ஸ் எயர்!

ஆசிரியர் - Admin
கொழும்பு- யாழ்- சென்னை இடையே பறப்பை ஆரம்பித்தது பிட்ஸ் எயர்!

கொழும்பு -இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பிட்ஸ் எயர் (Fits Air) விமான நிறுவனத்தின் விமானம் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான முதல் பயணத்தை மேற்கொண்டது. 

விமான சேவையின் ஊழியர்கள் சிலர் இந்த விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். பின்னர் இந்த விமானம் அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டது. சென்றுள்ளது. 

சென்னையில் இருந்து மீண்டும் பிட்ஸ் எயார் (Fits Air) விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வழியாக இரத்மலானைக்குத் திரும்பியது. நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இடம்பெறவுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு