மீண்டும் லொறியில் அடைக்கப்பட்டிருந்த 31 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்பு..! இலங்கையர்களுமா?

ஆசிரியர் - Editor I
மீண்டும் லொறியில் அடைக்கப்பட்டிருந்த 31 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்பு..! இலங்கையர்களுமா?

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லொறி ஒன்றில் மறைந்து பயணித்த 31 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியான பாகிஸ்த்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். 

இத்­தா­லிய எல்­லைக்கு அண்­மை­யிலுள்ள வீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட வழ­மை­யான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­யொன்றின் போது குறிப்­ பிட்ட லொறியில் உயி­ரா­பத்­தான நிலையில் அந்தக் குடி­யேற்­ற­வா­சிகள் மறைந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கடந்த மாதம் பிரித்­தா­னி­யாவில் குளிர்­சா­தன லொறி­யொன்­றி­லி­ருந்து 39 சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் குளிரில் விறைத்து சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களின் மீட்பு குறிப்­பி­டத்­தக்­கது. 

 உயி­ரா­பத்து மிக்க பயணம் என் பதை நன்கு உணர்ந்தும் சுபீட்­ச­மான எதிர்­கால வாழ்வை நாடி ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு அபா­ய­மிக்க பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவ­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். 

அந்தக் குடியேற்றவாசிகளில் இரு இளவயதினர் குடிவரவு செயற் கிரமங்களுக்கு அமைய இத்தாலிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட் டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு