கோட்டாவை பிடித்துள்ள ஏழரை சனியே முத்தையா முரளிதரன் என்கின்றனா் அரசியல் அவதானிகள்..!

ஆசிரியர் - Editor I
கோட்டாவை பிடித்துள்ள ஏழரை சனியே முத்தையா முரளிதரன் என்கின்றனா் அரசியல் அவதானிகள்..!

முத்தையா முரளிதரனின் கருத்தினால் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளா் கோட்டா பாாிய நெருக்கடியை எதிா்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனா். 

கோத்தபாய தலைமையில் வியத்மக அமைப்பின் இளைஞர் மாநாடு நேற்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முரளிதரன், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவரே 

நாட்டை ஆள வேண்டும் என்றும், வர்த்தகரோ விளையாட்டு வீரரோ ஏனைய துறைசார் வல்லுனர்களாலோ அதனை சாதிக்க முடியாது என்று கூறியிருந்தார். 

இது கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாட்டுக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான கருத்தாக பார்க்கப்படுகிறது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதி அல்லாத துறைசார் வல்லுனர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 

என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு