நவாலியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வீடு புகுந்து தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
நவாலியில் வாள்வெட்டு குழு அட்டகாசம்..! வீடு புகுந்து தாக்குதல்..

யாழ்.நவாலி- அட்டகிாி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே 

வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு