சேற்றில் புதைந்து மயக்கமடைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள்..! காப்பாற்றிய இராணுவம்..! பூநகாியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சேற்றில் புதைந்து மயக்கமடைந்த தாய் மற்றும் இரு பிள்ளைகள்..! காப்பாற்றிய இராணுவம்..! பூநகாியில் சம்பவம்..

பூநகாி- அரசபுறக்குளத்தில் நீராட சென்றிருந்தபோது சேற்றில் புதைந்த ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேரை இராணுவத்தினா் உயிருடன் மீட்டுள்ளனா். 

கிளிநொச்சி பூநகரி நான்காம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களே சேற்றில் புதையுண்டுள்ளனர். சேற்றில் புதையுண்டு மயக்கமடைந்திருந்த தாய் மற்றும் இரு பிள்ளைகளும் 

காப்பாற்றப்பட்டு பூநகரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு