வீடு புகுந்து வாள்வெட்டு பெண் ஒருவா் உள்ளிட்ட 6 போ் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து வாள்வெட்டு பெண் ஒருவா் உள்ளிட்ட 6 போ் படுகாயம்..!

ஓமந்தை- மாணிக்கா் வளவு பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத் தில் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

வீடொன்றிற்குள் நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது வாளால் தாக்கியதுடன், மான்கொம்பினாலும் தாக்கியுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் காயமடைந்ததாக தெரிவித்து மேலும் ஒரு பெண் உட்பட மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கபடும் மதுபோதையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு