அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..! வீடுகள், களஞ்யங்களை இடித்து தள்ளியது..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..! வீடுகள், களஞ்யங்களை இடித்து தள்ளியது..

சம்மாந்துறை- ஒடங்கா பகுதியில் இன்று காலை காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் புாிந்து ள்ளதுடன், வீடுகள், களஞ்சியங்களை அடித்து நொருக்கியுள்ளது. 

மேலும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கல்லிரைச்சல் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்து 

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏ.அமீர் என்ற நபரும் நேற்று உயிரிழந்தள்ளார்.

மேலும் இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டு மதில்கள் சேதமடைந்த நெற்களஞ்சிய பகுதிகளை காவற்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் 

சென்று பார்வையிட்டுள்ளனர். இது தவிர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடங்களை சுற்றி 50க்கும் அதிகமான யானை கூட்டங்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்குறிப்பாக இவ் யானை அடிக்கடி எங்கள் பிரதேங்களுக்கு வருகின்றன.

இதனால் எங்களுக்கு அச்ச நிலை காணப்படுகிறது சொத்துக்களுக்கு சேதங்கள் இடம்பெறுகின்றது .இது விடயத்தில் உரிய அதிகாரிகள் 

இது தொடர்பாக நடவடிக்கை மேற்க்கொண்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர். இது தவிர கடந்த சில தினங்களுக்கு முன்னரும் 

நிந்தவூர் பகுதிகளிலும் யானைகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு