கட்டுப்பாடற்ற வேகம் மற்றும் சாரதி துாக்கம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான டிப்பா்..! சாரதி படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் மற்றும் சாரதி துாக்கம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான டிப்பா்..! சாரதி படுகாயம்..

மடுக்கந்தை பகுதியில் டிப்பா் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். 

ஹெப்பற்றிகொலாவ யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் மடுகந்தை பகுதியில் (மடுகந்தை தேசிய பாடசாலைக்கு அண்மையில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து 

பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை 4மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சாரதியின் நித்திரை தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு