இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி!

சந்திரயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன் மாதிரியான அர்ப்பணிப்பையும், தைரியத்தையும் காட்டி உள்ளனர். இஸ்ரோ நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளது. இதில் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என நாம் அனைவரும் நம்புகிறோம்.

மேலும் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் விவரம்:- உள்துறை மந்திரி அமித்ஷா:- சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் இஸ்ரோவின் சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த திட்டத்துக்காக கடுமையாக, உறுதியாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளோடு இந்தியா துணை நிற்கிறது. எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங்:- உங்களின் கடின உழைப்பை பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். இதில், நாங்கள் பெருமை கொள்கிறோம். சந்திரயான் 2-வில் அடைந்த சாதனைகள் முன் மாதிரியாக இருக்கின்றன.

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு மீண்டும் கிடைக்கும் என்று நாடு காத்து இருக்கிறது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:- இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம். அவர்கள் புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளனர். அவர்கள் மன முடைய தேவை இல்லை. விஞ்ஞானிகள் மிகப் பெரிய பணியை செய்து இருக்கிறார்கள். இவ்வாறு தலைவர்கள் கூறி உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு