14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: சிவன்

ஆசிரியர் - Admin
14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: சிவன்

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ இன்று அதிகாலை நிலவை நெருங்கியது. நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவு இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் இன்று பேசியதாவது:

‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம். அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன்பாட்டிற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது. 

பிரதம் மோடி “அறிவியல் எப்போதும் முடிவுகளை தேடக்கூடாது. அனுபவங்களை தேடவேண்டும். அந்த அனுபவங்கள் முடிவுகளை அளிக்கும்” என கூறிய வார்த்தைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்துள்ளது என கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு