திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்..! 20 வயது இளைஞன் கைது. திருகோணமலையில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்..! 20 வயது இளைஞன் கைது. திருகோணமலையில் சம்பவம்.

15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 20 வயது இணைஞனை திருகோணமலை- மொரவெவ பொலிஸாா் கைது செய்துள்ளதுடன், சிறுமியை காப்பாற்றியுள்ளனா். 

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

15 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி ரொட்டவெவ மற்றும் நொச்சிகுளம் போன்ற இடங்களில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளதாகவும்,சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் 

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு