2350 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.மாநகரசபை கட்டிடம்..! பிரதமா் ரணில் அடிக்கல் நாட்டினாா்..

ஆசிரியர் - Editor I
2350 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.மாநகரசபை கட்டிடம்..! பிரதமா் ரணில் அடிக்கல் நாட்டினாா்..

யாழ்.மாநகர நகர மண்டபத்துற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இன்று நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருந்த பிரதமர் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே குறித்த அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுப் குறித்த நிகழ்வு மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் இடம்பெற்றது. 

புதிய மாநகரசபை கட்டிடத்திற்காக  2019ம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்த்து. 

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர,கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, 

எம்.ஏ.சுமந்திரன்,த.சித்தார்த்தன்,யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்,யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் 

நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு