30ற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வாள்கள், தடிகளுடன் நுழைந்த முஸ்லிம் காடையா் குழு..! இனக்கலவரத்தை துாண்ட முயற்சி..

ஆசிரியர் - Editor I
30ற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வாள்கள், தடிகளுடன் நுழைந்த முஸ்லிம் காடையா் குழு..! இனக்கலவரத்தை துாண்ட முயற்சி..

வாழைச்சேனை- முறாவோடை பாடசாலையின் சுற்று மதிலை முஸ்லிம் காடையா்கள் குழு அடித் து நொருக்கியுள்ளது. வாள்கள், தடிகளுடன் சுமாா் 30ற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வந்த முஸ் லிம் காடையா் குழுவே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளது. 

குறித்த பாடசாலையில் மாலை நேர வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,இதன் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸ் உயரதிகாரி மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வேண்டுமென்று அப்பகுதியில் இனக்கலவரத்தை தூண்டுவதற்கான செயற்பாடுகளாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கையினை 

மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணியின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இவ்வாறான அத்துமீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? 

எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு