திடீரென தீ பிடித்து எரிந்த மதுபான நிலையம், கோண்டாவிலில் பரபரப்பு..

ஆசிரியர் - Admin
திடீரென தீ பிடித்து எரிந்த மதுபான நிலையம், கோண்டாவிலில் பரபரப்பு..

தாவடி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் நேற்று மாலை சாம்பிராணி  தூபம் போடப்பட்ட நிலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மதுப் பிரியர்கள் கூடி மதுபான கொள்வனவிலும் அதிக நாட்டம் காட்டினர்.

காங்கேசன்துறை வீதியில் தாவடி பகுதியில் அமைந்துள்ளத  மதுபான சாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமையின்   பொருட்டு  வர்த்தக நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெய்வ படங்களுக்கு விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்டிய  போது மேற்படி தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு ஏற்பட்ட தீ வர்த்தக நிலையத்தில் மிக வேகமாக பரவி உள்ளது இதனை அடுத்து உடனடியாக தன்னுடைய உரிமையாளர் இலங்கை மின்சார சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு சேவை  ஆகியவற்றிற்கு தகவல் வழங்கினரார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்பு இயந்திரமும் மற்றும் இலங்கை மின்சார சபையினரும் உடனடியாக செயல்பட்டு குறித்த தீயினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருந்த பொழுதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பே பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது இதே நேரம் குறித்த மதுபானசாலை தீ விபத்து ஏற்பட்டு குறித்த தீ அணைக்கப்பட்டது. 

இவ்வாறு தீ பரவிய சமயம் குறித்த இடத்தில் பலர் கூடியபோதும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னே கண்டறியப்பட்டது அவர்கள் மதுபான கொள்வனவிற்கு கூடியவர்கள் என. இதனால் மதுபான சாலையில்  சில வினாடிகளிலேயே  நூற்றுக்கணக்கான மது பிரியர்கள் கூடி மது விற்பனையும்இடம்பெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு