தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அதில் விருப்பமில்லை..! மஹிந்தவின் காலம் தாழ்த்திய கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அதில் விருப்பமில்லை..! மஹிந்தவின் காலம் தாழ்த்திய கண்டுபிடிப்பு..

வடகிழக்கு அபிவிருத்திக்கு என்னுடைய ஆட்சிக்காலத்தில் அதி முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் இன்று வடகிழக்கில் பெயரளவிலேயே அபிவிருத்திகள் நடந்து கொண்டிருக்கின்றன,   என கூறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, 

தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீா்க்கப்படவேண்டும் என்பதில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சிறிதளவும் அக்கறை கிடையாது. அவா்கள் அரசியலமைப்பை காட்டி அரசை ஆதாித்தாா்கள். எனவும் கூறியுள்ளாா். 

நீதிக்கான குரல் அமைப்பின் மாநாடு இன்று பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஆட்சி மாற்றத்தையே நாட்டு மக்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு கடந்த அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

தற்போது வடக்கில் பெயரளவிலே அபிவிருத்திகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கிடையாது. அவர்கள் கடந்த நான்கு வருட காலமாக 

அரசியலமைப்பு உருவாக்கம் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள். ஆகவே அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளினால் 

ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் பழிவாங்களுக்குட்பட்ட மக்களுக்கு எமது ஆட்சியில் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு