மட்டக்களப்பு சிறையில் இளைஞன் உயிாிழப்பு..! விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு சிறையில் இளைஞன் உயிாிழப்பு..! விசாரணைகள் தீவிரம்..

மட்டக்களப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் இன்று காலை உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் (27-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக 

குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இளைஞனின் சடலம் 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு