யாழ்.மாவட்டத்தில் இந்த வாரம் 11 பாாிய அபிவிருத்தி திட்டங்கள்..! 200 மில்லியன் ஒதுக்கிய பிரதமா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இந்த வாரம் 11 பாாிய அபிவிருத்தி திட்டங்கள்..! 200 மில்லியன் ஒதுக்கிய பிரதமா்..

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவினால் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் 11 பாாிய செயற் றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளா் சிவஞானசோதி கூறியுள்ளாா். 

இதன்படி நீர்வேலியில் மரவேலை தொடர்பான இயந்திர வசதிகளுக்கு நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3.5 மில்லியன் ரூபாவும், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் செய்வதற்கான இயந்திர உபகரணங்களுக்கு 7.7 மில்லியன் ரூபாவும், 

நீர்வேலி வாழைநார் அடிப்படையிலான உற்பத்திகள் உள்ளடங்கலாக 102.89 மில்லியன் ரூபா பெறுமதியான கருத்திட்டங்கள் இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு