பக்கோ வாகனத்திற்குள் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த நபர்..!

ஆசிரியர் - Editor I
பக்கோ வாகனத்திற்குள் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த நபர்..!

நாவலப்பிட்டி பகுதியில் பக்கோ இயந்திரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது பக்கோ இயந்திரத்தின் பாகம் ஒன்று கழன்று வீழ்ந்த நிலையில் இயந்திரத்திற்குள் சிக்கிய நபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் இன்று  05. வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக தெரிவித்தனர்.குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த பெக்கோ இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 

பெக்கோ இயந்திரத்தின் ஒரு பகுதி திடிர் என விழுந்ததில் குறித்த நபர் சிக்குண்டு ஸ்தலத்திலையே பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 

நாவலபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு