சாவகச்சோியில் பரபரப்பு..! மாவை சேனாதிராஜா முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சுகாதார தொண்டா்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோியில் பரபரப்பு..! மாவை சேனாதிராஜா முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சுகாதார தொண்டா்..

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்ககோாி போராட்டம் நடாத்திவரும் சுகாதார தொண்டா் கள், நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா முன்னிலையில் மண்ணெண்ணை ஊற் றித் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

வடமாகாண சுகாதாரத் தெண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக்கோரி சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவா்களை நோில் சந்திப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா,

இன்று காலை சென்றிருந்தாா். இதன்போது தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குங்கள் அல்லது நாங்கள் தற்கொலை செய்கிறோம் என கூறிய தொண்டா்கள், மாவை சேனாதிராஜா முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனா். 

எனினும் அங்கிருந்தவா்கள் அதனை தடுத்து காப்பாற்றியுள்ளனா். நீண்டகாலமாக பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு நீண்டகாலமாக போராடிவருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தில் 

பலர் புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் நேற்று தொடக்கம் வடக்கு மாகாண சபைக்கு முன்பாக இரவு இரவாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.இந்நிலையில் இன்று சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு முன்பாக கூடிய போராட்டக் குழுவினர் 

தமக்கும் நியமனத்தை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுனர். இதன்போதே மேற்படி அசம் பாவிதம் ஏற்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு