கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய செயற்பாட்டாளர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து, அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய செயற்பாட்டாளர் உயிரிழப்பு..

கிளிநொச்சி- அறிவியல்நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அரசியல் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.40 மணியளவில் கிளிநொச்சியில்அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் 

பிரதான வீதிக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் கிளிநொச்சியிலிருந்து 

முறிகண்டி நோக்கி பயணதித்த பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காரை செலுத்தியே சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் கிளிநொச்சி மாவட்டத்தில் மகிந்தராஜபக்ச அவர்களின் செயற்பாட்டாளராக இருந்த தீபன் என அழைக்கப்படும் லண்டன் பிரஜையே என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் பல்வேறு சிமங்களின் மத்தியில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை 

மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் சாரதி தவிர்ந்து வேறு எவரும் பயணித்திருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்





.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு