நிரந்த நியமனத்தை வழங்கு..! வடமாகாணசபையை முற்றுகையிட்ட சுகாதார தொண்டா்கள்..

ஆசிரியர் - Editor I
நிரந்த நியமனத்தை வழங்கு..! வடமாகாணசபையை முற்றுகையிட்ட சுகாதார தொண்டா்கள்..

வடமாகாண சுகாதார தொண்டா்கள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க வேண்டு மென வலியுறுத்தி வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனா். 

மாகாண ஆளுநரின் பொது மக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே சுகாதார தொண்டா்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.

குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டா்கள்,

தமக்கான நிரந்தர நியமனத்தை கால தாமதமுன்றி விரைந்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு