யாழ்.நகருக்குள் நேற்றிரவு ரவுடிகள் அட்டகாசம்..! இரு ரவுடிகளை மடக்கி பிடித்த பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
யாழ்.நகருக்குள் நேற்றிரவு ரவுடிகள் அட்டகாசம்..! இரு ரவுடிகளை மடக்கி பிடித்த பொலிஸாா்.

யாழ்.ஸ்ரான்லி வீதியில் அட்டகாசம் புாிந்து இரு ரவுடிகளை பொலிஸாா் நேற்றிரவு கைது செய்துள்ளனா். 

ஸ்ரான்லி வீதியில் உந்துருளிகளில் தலைக் கவசமும் இன்றி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இரு குழுக்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை அவதானித்த சிலர் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து நகரில் கடமையில் இருந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு வருகை தந்தனர்.

இதன்போது உந்துருளி ஒன்றில் தப்பி ஓட முயற்சித்த இருவரை மடக்கிப் பிடித்த பொலிசார் இருவரையும் விலங்கிட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு