வடமராட்சி அல்வாய் பகுதியில் இரு ரவுடி கும்பலுக்கிடையில் மோதல்..! 5 ரவுடிகள் காயம், 4 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி அல்வாய் பகுதியில் இரு ரவுடி கும்பலுக்கிடையில் மோதல்..! 5 ரவுடிகள் காயம், 4 ரவுடிகள் கைது..

யாழ்.வடமராட்சி- அல்வாய் பகுதியில் நேற்றய தினம் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெ ற்ற மோதலில் 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்வாய் தெற்கில் நேற்றிரவு 11 மணியளவில் இரண்டு வீட்டுக்காரர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அந்த வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது.சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் நெல்லியடிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வந்துள்ளனர். 

எனினும் பொலிஸார் வருவதை கண்ட சிலர் தப்பியோடியுள்ளதுடன், இரத்த காயங்களுடன் அங்கிருந்த 4 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதன்பின் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைப் பொலிஸார் 

முன்னெடுத்த நிலையில் மறைந்திருந்த 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இரத்தக்காயங்களுடன் இருந்தபடியால் அவரும் பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏனைய நால்வரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றதாக தெரியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு