முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

மட்டக்களப்பு கள்ளியன் காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 

கடந்த 26ஆம் திகதி மாலை இரகசியமாக குறித்த மயானத்தில், தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன.

இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி உடற்பாகங்களை தோண்டியெடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு