இராணுவ அதிகாாி வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
இராணுவ அதிகாாி வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் மீட்பு..!

குருநாகல் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவாிடம் T-56 துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் மீட்கப்பட்ட நிலையில், அவற்றை வைத்திருந்தவா்கள் இராணுவ அதிகாாி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை குருணாகல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சோதனையிட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவரின் வீட்டில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, 

அதனை சுத்தம் செய்வதற்கான கருவிகள், இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட ரைபில் ஒன்று, துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கு கருவி ஒன்று, போரா 12 துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் வெற்று தோட்டாக்கள் 6, 

இராணுவத்தினர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் 2, பெல்ட் ஓடர் 2 மற்றும் பல பொருட்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சந்தேக நபர்களை நேற்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48 மணிநேர தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு